பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13


போரினிலே கிடைத்தபொருள்
        தமிழ்க்களித்துப் புகழ்சேர்த்தான்
                வள்ளல் காரி!
கூரையிலே கூடடையும்
        சிட்டிற்கும் தாய்ப்பேச்சு!
                குளிர்மைப் பேச்சாம்!
ஊரினிலே வாழ்கின்றோம்;
        உயர் தமிழர் என்கின்றோம்;
                உதவாப் பேச்சு!
‘யாரினிமேல் தமிழ்காக்க?’
        எனுங்கேள்வி எழும்பாமுன்
                எழுந்து வாரீர்! 8

உன்னைப்போல் தமிழ்காக்க
        ஒருகாரி இந்நாட்டில்
                உயிர்த்தால் போதும்!
பின்னிங்கே வேற்றுமொழி
        வருகின்ற பேச்செடுத்தால்
                பிணந்தான் வீழும்!
இந்நாட்டார் தமிழ் நாட்டார்,
        இன்றுள்ள அரசியலார்
                எல்லாம் மாறிப்
பொன்னாட்டைப் புனல்நாட்டைத்
        தமிழ்நாட்டை வாழ்விக்கும்
                புலிப்போத் தாவார்! 9

பாய்புனல்சூழ் தமிழ்நாட்டின்
        வீரத்தை, நற்பெயரைப்,
                பண்பை விட்டே
வாயில்லாப் பூச்சியானார்
        கொல்புலிகள்! மறத்தோளும்
                சூம்பற் றோளோ?