பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

திருக்கோவ லுரர்வாழ்ந்தான்!
        காரிநோக்கித் திரண்டுவரும்
                புள்ளைப் போலப்
பெருங்கூட்டம் தமிழ்க்கூட்டம்
        பாட்டிசைக்கும் பெற்றியினைப்
                பேசப் போமோ? 5

தமிழுக்கும், தமிழ்நாட்டு
        மன்னருக்கும் தடந்தோளின்
                தகைமை காட்டித்
தமிழுக்கும், தமிழ்நாட்டுப்
        பெரும்புலவர் இனத்திற்கும்
                தாய்போல் நின்று
தமிழுக்கும் புகழ்சேர்த்தான்;
        தமிழ்வளர்த்தான்; தமிழ்நாட்டைத்
                தாக்க வந்த
உமிச்சிறகுக் கொசுக்கூட்டம்
        ஆரியரின் ஓட்டத்தை
                உரைக்கப் போமோ? 6

வடக்கிருந்து வந்தவரை
        வாள்முனையில் வெற்றிகொண்டான்
                மலையன்! அந்த
வடக்கிருந்து வருமெதுவும்
        தமிழுக்குப் பகையென்றால்
                பகைந மக்காம்!
அடக்கத்திற் கெல்லையுண்டே!
        அன்னைக்கும், அருந்தமிழ்க்கும்
                தொல்லை என்றால்
கிடக்கட்டும் என்றிருக்கும்
        கீழ்ச்செயலோ நாம்செய்வோம்?
                கிடையா தென்றும்! 7