பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161 தொழிலும் உழவும் தொடர்ந்து வளர்ந்தாலே அழியாப் பொருளின் அடிப்படை சீர்படுமே! ஏழைக்கு வாழ்வளிக்க எண்ணும் தமிழரசு வாழவைக்க வந்துள்ள வளமார் கலையரசு! திருக்குவளை அஞ்சுகத்தாய்ச் சிரிப்பின் விளைவுப் பெருக்காம் கருளு நிதி பேச்சழகர், தொழில்வளர்க்க எண்ணும் பலர்க்கும் துணையாய் வழிகாட்ட வந்துள்ளார்; தொழில்வளர்ப்போம் வாரீர்! இழிவில்லை எத்தொழிலும்; இதைமறக்க வேண்டாம்! அழியாத பொற்காலம் அடைந்திடுவோம் என்றும்! १ |குயலை நாட்டின் தொழிற்பெருக்கம் அரசின் நலப்பெருக்கம்! வீட்டின் வளப்பெருக்கம் மேவும் தொழிற்பெருக்கம்! சந்துபல வானலும் சாருமிடம் ஒன்றேபோல் எந்தத் தொழிலாலும் ஏற்றம் மிகும் நாடே! வீட்டுக்கு வீடு தொழிலை வளர்த்திடுவோம்! நாட்டுக்கு மக்கள் நலம்சேர்க்கும் தொண்டிதுவாம்! மாற்ருர் எதிர்ப்பிற்கும், மற்ருேரின் நட்பிற்கும், போற்றும் தொழிற்பெருக்கம் பொன்குவித்து வாழ்வளிக்கும் தொழில்வளர்க்கும் வாய்ப்பிற்குத் துறைதோறும் |துறைதோறும் வழிவகுக்கக் காத்திருக்கும் தமிழரசை வாழ்த்துவமே! கல்லூரி சென்று கலபயின்று வேலையின்றி அல்லும் பகலும் அலைகின்ற தமிழ்நாட்டீர்! கைத்தொழிலைக் கற்றிடுவீர்;கவலை பறந்தோடும்! எத்தொழிலும் இழிவில்லை.எனவெண்ணிச் செயல்படுitl படிப்பில்லை என்ருலும் பலதொழிலைக் கற்றிருந்தால் இடிவில்லை வாழ்க்கைக்கு நடைமுறையில் இதைக்காண்பீர்! ií 3.