பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆங்கில நாட்டுக்குச் சென்றவர்கள்-பலர் அருமைக் குணங்களை விட்டுவிட்டுத் தீங்கான வழிகளில் சென்றதனுல்-மிகச் சீரழிந் தாரெனக் கூறினரே. அன்னை உரைத்ததைக் கேட்டதுமே-அவர் அருகினில் சென்றுகம் காந்தியுமே, எேன்இனரீ நம்பிட வேண்டுமம்மா-கான் என்றும் ஒழுங்காய் இருப்பேனம்மா. மாமிசம் சாப்பிட மாட்டேனம்மா-தீய வழிகளில் செல்லவே மாட்டேனம்மா. சாமிக்குப்பொதுவாகச்சொன்னேனம்மா.இது சத்தியம், சத்தியம், சத்தியமே." என்றதும் அன்னை மகிழ்ந்தனரே-உடன் இணங்கினர் மகனை அனுப்பிடவே. அன்னையின் அனுமதி பெற்றதுமே-காந்தி அளவில்லா ஆனந்தம் கொண்டனரே. 55