பக்கம்:பாட்டுத் திறன்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 18 கவிதை உணர்த்தும் உண்மை வாழ்க்கையிலும் மனிதப் பண்பிலும் உள்ள பொதுத்தன் மையை எடுத்துக் கூறுவதே கவிதையின் நோக்கமாகும், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற உயர்ந்த குறிக் கோள் கவிதைத் துறையில் எளிதாக நிறைவேறுகின்றது. கவிஞ னின் மனத்தில் தோன்றிய அதுபவமே கவிதையாக முகிழ்க்கின் றது:வடிவம் கொள்ளுகின்றது, கவிதையைப்படிக்கும் நாமும் அக் கவிஞன் பெற்ற அதுபவத்தையே பெற்று விட்டால் ,கவிதையும் உணர்த்த வேண்டியவற்றை உணர்த்திவிடும்கிலையை அடைந்து விடுகின்றது, திருவாசகத்தேனை உண்ட அறிஞர்களில் பலர்தம் அநுபவத்தை வெளியிட்டுள்ளனர். வேற்றுச் சமயத்தைச் சார்ந்த வேற்று நாட்டினராகிய ஜி.யு. போப் இதன் பக்திச்சுவை யில் ஈடுபட்டு இதனை யொத்த பக்தி நூல் யாண்டும் இல்லை, யெர்ன்று கூறினார். சிவப்பிரகாச அடிகள், திருவாசகம் இங் கொருகால் ஒதின் கருங்கல் மனமும் கரைத்துகக் கண்கள் தொடுமண்ற் கேணியின் சுரங்துநீர் பாய அன்பர் ஆகுநர் அன்றி. மன்பதை உலகில் மற்றையர் இலரே." என்று அவ்வநுபவத்தை எடுத்தோதுவர்! சமயத்துறையில் எங் கும் சமரசத்தைப் பரப்பிய வடலூராரும் திருவாசகத்தில் ஈடு பட்டுப் படித்தால், நற்கருப்பஞ் சாற்றினிலே தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே" 1, திருமத்திசம்- 2, நால்வர் நான் மணிமாலை-4, 3. திருவருட்ப ஆளுடைய அடிகள் அருள் மாலை-7, பா-21