இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நான்கு குருடர்கள் வந்தனரே - அந்த
- நால்வரும் ஒன்றாகக் கூடினரே
ஆனையைக் காண விரும்பினரே -- அதன்
- அருகில் நால்வரும் சென்றனரே.
காலினைத் தொட்டான் ஓர்குருடன் -- யானை
- கம்பத்தைப் போல இருக்குதென்றான்
வாலினைத் தொட்டான் ஓர்குருடன்-குப்பை
- வாரும் துடைப்பத்தைப் போன்றதென்றான்.
தும்பிக்கை தொட்டான் ஓர்குருடன்-யானை
- தோன்று துலக்கை போல் என்று சொன்னான்
தம்பி! முறமென்று நம்பிவிட்டான் - காதைத்
- தடவிப் பார்த்த மற்றொருவன்.
33