பக்கம்:பாட்டும் கதையும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


நான்கு குருடர்கள் வந்தனரே - அந்த

நால்வரும் ஒன்றாகக் கூடினரே

ஆனையைக் காண விரும்பினரே -- அதன்

அருகில் நால்வரும் சென்றனரே.


காலினைத் தொட்டான் ஓர்குருடன் -- யானை

கம்பத்தைப் போல இருக்குதென்றான்

வாலினைத் தொட்டான் ஓர்குருடன்-குப்பை

வாரும் துடைப்பத்தைப் போன்றதென்றான்.


தும்பிக்கை தொட்டான் ஓர்குருடன்-யானை

தோன்று துலக்கை போல் என்று சொன்னான்

தம்பி! முறமென்று நம்பிவிட்டான் - காதைத்

தடவிப் பார்த்த மற்றொருவன்.

33