உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டும் பயனும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

4

அதன் பொருள் உணர்ந்து பயன்பெற விரும்புவார் மிகச் சிலரே. புலவர் வாய் மொழிக்குப் பயனே மக்கள் ஒழுக்கமும் பண்பாடும் உற்று வாழ்வதாகும். அந்த வகைக்கு இப்பத்துப் பாட்டு எவ்வாறு பயன் பெறுகின்றது என்பதை இந்நூலில் ஒரளவு காட்டியதாக நான் கருதினமையின் இதற்குப் 'பாட்டும் பயனும் ' என்று பெயரிட்டேன். அறிஞரும் பிறரும் ஏற்று என்னை இத்துறையில் பணியாற்ற மேலும் ஊக்குவார்கள் என்ற துணிபுடையேன்.

    இப்பேச்சு வரிசையை விரும்பி அமைத்து என்னைப் பேச வைத்த மதுரைத் திருவள்ளுவர் கழகத் தலைவர் திரு. பழநியப்பன் அவர்களுக்கும், இப்பேச்சுக்கள் நிகழும் காலத்திலேயே குறிப்பெடுத்துக் கட்டுரைகளாக்கித் தந்த புலவர், திரு. சாம்பசிவம் அவர்களுக்கும், வள்ளுவர் கழகமே புலவர் பேரவை என்னுமாறு ஒன்று கூடி எனக்கு ஊக்கமளித்த மதுரைத் தமிழ்ப் புலவர்களுக்கும், இந்நூல் வர உதவிய பிற அனைவருக்கும் என் வணக்கத் தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள் கிறேன்.

தமிழ்க்கலை இல்லம் சென்னே..30 அ. மு. பரமசிவானந்தம் 1–6–59