பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 சலித்தன கண்கள் ! பார்த்துச் சலித்தன கண்கள்!-அடிக்கடி பார்த்துச் சலித்தன கண்கள்!-என் பைந்தமிழ் அன்பர் சென்ற வழியினை நேற்றிரா முழுமையும் நித்திரை இல்லை! நீள்கடல் என்னைப்போல் அடைந்தது தொல்லை! படுக்கைச் சிறுவிளக்கும் ஏளனம் செய்யும்!, வாயும் தலையணையும் எனக்குநோய் செய்யும்: அடிக்கடி அவர்பேச்சைக் காதொலி செய்யும்! அறைச்சுவர் எங்கனும் நிழலுருச் செய்யும்! காவல்நாய் வீட்டோரம் காதுகள் உதறும்! கதவைத் திறந்துபார்த்தே என்மனம் பதறும்! ஆவலடங்கா உள்ளம் அடுக்களை செல்லும்! அருந்த உணவெடுக்கும் மருந்தென்று வெறுக்கும் 1 ||