பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 அத்தை மகள் ! அத்தைமகள் என்றன் சொத்தெனவே எண்ணி அன்பை வளர்த்த துண்டே!-நெஞ்சில் அன்பை வளர்த்த துண்டே! சித்திரை மாந்தளிர் மேனியாள்! கொத்தும் கிளிமொழியாள்! புத்தமுதாம்விழி! கொத்துமுல்லைந்கை! பூங்கொடி மின்னல் இடையாமே!-அந்த மாங்குயில் சாயல் மயிலாமே! ஒடைக் குளிர்தரும் இன்பத்தாள்! அந்த ஒடை மலர்நிற வண்ணத்தாள்! மாடப்புரு அவள்! வேடன் கைப்பட்ட்னள்! மூடிற்றிருள் என்றன் வாழ்விலே!-இனித் தேடும்பொருள் இல்லை வாழ்விலே! 10