பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் உரை நான் கவிதை எழுதத் தொடங்கிய நாளி லிருந்து இற்றை நாள் வரை எழுதிய கவிதை களில் இதுவரை வெளிவந்துள்ள கவிதை நூல்கள் ஒன்பதிலும் சேர்க்கப்படாமல் எஞ்சி யிருந்தவைகளைத் தேடித் திரட்டித் தொகுத்தும் வகுத்தும் மூன்று நூலாக உருவாக்கித் தந்தனர் என் கெழுதகை நண்பர்கள். அவற்றுள் சிரித்த நுணு', இரவு வரவில்லை' என்னும் இரு நூல்கள் அண்மையில் வெளிவந்துள்ளன. பாட்டுப் பிறக்குமடா!' என்னும் இந்த நூல் மூன்ருவதாகும். இதில் அடங்கியுள்ள பாடல். கள் அனைத்தும் இசைப் பாடல்களாகும். இசைப் பாட்டுக்கள் அடங்கிய நூல்களில் தொடு வானத்'திற்குப் பிறகு வெளிவரும் நூல் இதுவே ஆகும். - இதிலுள்ள கவிதைகளில் பல அவ்வப் போது இதழ்களிலும், பிறரால் வெளியிடப் பட்ட நூல்கள் மலர்கள் ஆகியவற்றிலும் வெளியானவை. சில புதிதாக எழுதிச் சேர்க்கப் பெற்றவையாகும். . . . . - இதனை வெளியிட்ட ஐயை பதிப்பகத் தார்க்கும், வி. ற் பனை உரிமை ஏற்றுள்ள மைேன்மணி புத்தக நிலையத்தார்க்கும் என் நன்றி! . -வாணிதாசன்,