பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 பாண்டியநாட்டுத் திருப்பதிகள் மேலும், நீர்வளம் நிலவளம் மிக்க அவ்வந்தணன் பிறந்த ஊராகிய திருத்தங்காலையும்குறையாத விளையுளையுடைய வயலூர் என்னும் ஊரினையும் அப்பார்ப்பனனுக்கு முற்றுாட்டாக வழங்குகின்றான். பின்னர் அவ்வந்தணனை யும் கற்புடைத் தெய்வமாகிய கார்த்திகையையும் தன் மார்பு நிலத்தில்பட வீழ்ந்து வணங்குகின்றான். இங்ங்னம் இத்திருத்தலப் பயணம் சிலப்பதிகார நிகழ்ச்சி யொன்றினையும் நினைக்கச் செய்கின்றது. இதனால் இத்திருத்தலத்தின் தொன்மையையும் பழம் பெருமையையும் அறிந்து போற்றியவண்ணம் பேருந்து மூலம் விருதுநகரை அடைகின்றோம. அங்கிருந்து இருப்பூர்தியின் மூலம் மதுரை வந்து நாம் தங்கியிருக்கும் மங்கம்மாள் சத்திரத் திற்கு வந்து சேர்கின்றோம்.