பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடவுள் துணை

பாண்டிய மன்னர்



(முதற் பகுதி)


தமிழ்த் தெய்வ வணக்கம்

அறமுதனான் கமையவுணர்த் தருட்பணியைப் பூண்டருளும்
திறமொருமூன் றுடையதமிழ்த் தேவிதிரு வடியிணையிற்
புறமகமாம் பொருளினலம் பொருந்துறுமா றுரிமையுடன்
மறமகலு மனவாக்கால் வழிபட்டு வணங்கிடுவாம்.

1. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி

I

திரவன் குண திசைச் சிகரம் வந்து அடைந்தான். உலக முழுவதும் பொன்மயமான ஒளி பரவியது. இரவு முழுவதும் உலகைக் கைக்கொண்டிருந்த இருட்படலம் ஞானாசாரியனது அனுக்கிரகத்துக்குப் பாத்திரமாகிய ஆஸ்திகன் ஒருவனது மனத்து அகவிருள் ஒழிவதுபோல ஒழிந்தது, தம் தலைவன் வருகையைக் கண்டு மகிழும் பெண்டிர் முகம்போலப் பொய்கைகளிலே தாம-