பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

VI

காரி கிழார் மறு முறை யெழுந்து, வாழ்த்துதற்கேற்ற வண்ணமாய் இரு கரங்களையும் அமைத்துக் கொண்டு, பின்வரும் செய்யுளைப் பாடினார் :


“வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅ(து) உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும்
கீழது, முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின்
நீர்நிலை நிவப்பின் கீழும் மேல(து)
ஆனிலை யுலகத் தானு மானா(து)
உருவும் புகழும் ஆகி விரிசீர்த்
தெரிகோல் ஞமன்ன் போல வொருதிறம்
பற்றல் இலியரோ நிற்றிறஞ் சிறக்க
செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்
கடற்படை குளிப்ப மண்டி யடர்ப்புகர்ச்
சிறுகண் யானை செவ்விதின் ஏவிப்
பாசவற் படப்பை யாரெயில் பலதந்(து)
அவ்வெயிற் கொண்ட செய்வுறு நன்கலம்
பரிசின் மாக்கட்கு வரிசையின் நல்கிப்
பணியிய ரத்தைநின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே

இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த