பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


முறையாகும்.

(13) நிற்க வைத்திருக்கின்ற இரண்டு கார்களுக்கிடையிலோ அல்லது நின்றுகொண்டிருக்கும் கார்களுக்குப் பின்னாலோ நடக்கக் கூடாது.

(14) ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்திற்குப் போகவேண்டும் என்று விரும்பினால், மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை இருந்தால், அதைத்தான் பயன்படுத்தவேண்டும்.

மேம்பாலமோ அல்லது சுரங்கப்பாதையோ இல்லாதுபோனால், மிகவும் சுறுசுறுப்பாயுள்ள ஒரு சாலையினைக் கடக்க விரும்புகின்றவர்கள், கீழ்க்காணும் பாதுகாப்பு வழிமுறைகளை நிச்சயம் கடைபிடிக்கவேண்டும்.

(1) பல திசைகளையும் முதலில் சுற்றும் முற்றும் பார்த்து, வாகனங்கள் வருகின்றனவா என்று தெரிந்து கொண்டு, வரவில்லை என்று உறுதியாக அறிந்த பின்னரே, கடக்க முயலவேண்டும்.

(2) சாலையில், வழிகாட்டும் விளக்கின் அமைப்பு இருந்தால், (Light system) பச்சை விளக்கு வரும்வரை காத்திருந்து, அதன் பிறகு தான் கடக்க வேண்டும்.

(3) பச்சை விளக்கைப் பார்த்துப் போகும் பொழுது கடப்பதற்குரிய நடைபாதை காட்டும் கோடுகளுக் குள்ளேதான் நடந்து செல்ல வேண்டும்

அதற்குப் பின்னர், வளைவிலிருந்து (Curve) திரும்பி