பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பாபுஜியின் பாபு திரும்பினான் பாபு. ஒரு கையில் பிஸ்கட் இருந்தது : அடுத்த கையில் ஐஸ் ஃபுளுட் வழிந்தது. வாங்கி வந்திட்டியாடா?' என்று கேட்டான் ராமன். “5” . "எனக்கு? என்றாள் சீதை, •ష్ట్ర ! w பிஸ்கட்டைப் பெற்றுக்கொண்ட ராமன், இது ஐம்பது காசுதானே?’ என்று அதிகாரமாகக் கேட்டான். "இல்லேப்பா, ராமா. அம்மா ஆர்டர் கொடுத்ததுக்குத் தான் வாங்கியாந்தேன்!" உண்மையின் கம்பீரத்துடன் பாபு பதிலிறுத்தான். பாபுவின்பேரில் ஆத்திரம் பொங்க, அவனை விழுங்கி விடுகிற மாதிரி பார்த்தான் ராமன். பொங்கல் புதுச்சட்டை பளபளத்தது. சீதை பனிக்கட்டிப்பழத்தை-ஆமாம், ஜஸ் ஃபுரூட்டைச் -சுவைப்பதில் ரசனை காட்டினாள். ராமன் பிஸ்கட்டைப் பார்த்தான். அபயாம்பாள் முகப்புக்கு வந்ததும், அவளிடம் மீதமிருந்த காசை நீட்டினான் பாபு. எஜமானி அம்மாள் பாபுவை அனுதாபத்துடனும் பாசத் துடனும் பார்வையிட்டாள். - ւու உள்ளே எதையோ கண்டு திகைப்படைந்து, அவசரமாக ஓடினான். マ - ^ - * நடையிலிருந்த பூஞ்சிட்டுக் கடிகாரத்தை எடுத்துக் கையில் எந்திய காசி, அருகில் நின்ற சேட்ஜியைத் தொடர்ந்து, அவர் காரில் அக்கடிகாரத்தை வைத்ததைக் கண்டதும், அப்படியே கல்லாய்ச் சமைந்துவிட்டான் பாபு!