பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

பாபு இராஜேந்திர பிரசாத்

கிராம மக்களது கஷ்டங்களை நீக்கி, அவர்களது வாழ்க்கையை உயர்த்த வேண்டுமானால், தொண்டர்களிடம் சத்தியம் வேண்டும். அவர்களிடம் அச்சம் அறவே இருக்கக் கூடாது. வறுமை ஒழிப்பு நோன்பை ஒவ்வொரு மாகாணத் தலைவர்களும் உணர்ந்து, அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த உயர்ந்த லட்சியத்தைத்தான் காந்தியடிகளது ஏழ்மை ஒழிப்பு, சம்பரான் சேவை நமக்கு உணர்த்தியது என்று ராஜன்பாபு மக்கள் இடையே பேசும் போதெல்லாம் சுட்டிக் காட்டி, அதற்காக அயராது உழைத்தார்.

“நானும், எனது நண்பர்களும் பாட்னாவிலே இருந்து சம்பரான் என்ற நகருக்குச் சென்ற போது, எங்களில் பலருக்கு பல வேலைக்காரர்கள் இருந்தார்கள். எங்களுக்குரிய உணவுகளைத் தயாரிக்க சில சமையற்காரர்களும் உடனிருந்தார்கள். சில மாதங்கள் சென்ற பின்பு, நாங்கள் வேலைக்காரர்களைக் குறைத்துக் கொண்டோம். பிறகு, ஒரே ஒரு பணியாளனை வைத்துக் கொண்டே எல்லா வேலைகளையும் நாமே செய்து வந்தோம்.”

“எங்களில் பலர் அன்று வரை கிணற்றிலிருந்து ஒரு குடம் தண்ணீரையும் எடுத்ததில்லை. எங்களது உடைகளைத் துவைத்துக் கொண்டதும் இல்லை. சுருக்கமாகக் கூறினால் ஒரு சிறு வேலையையும் நாங்கள் செய்தது கிடையாது. அவரவர்களுக்கு அவரவர் கைகளே உதவி என்ற காந்தீயப்படி நாங்கள் நடந்து வந்தோம்” என்று ராஜன் பாபு உழவர்கள் இடையே பேசும் போது குறிப்பிடுவார்.

இதற்கெல்லாம் காரணம், சம்பரானுக்கு மகாத்மா அறப்போர் செய்ய வந்து தங்கிய போது பழகியவைதான். எல்லா வேலைக்காரர்களையும் நாங்கள் வேலையிலே இருந்து அறவே நிறுத்திவிட்டோம். அதன் எதிரொலி என்ன தெரியுமா?

நாங்களே கிணற்றிலே இருந்து குடங்குடமாகத் தண்ணீரைச் சேந்திச் சேகரித்தோம். அவரவர் துணிகளை அவரவர்களே