பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

பாப்பா முதல் பாட்டி வரை

முடியும். சல்பர் களிம்பு, அல்லது ‘பென்ஜைல் பென்ஜோவேட்’ மருந்தைக், கழுத்திலிருந்து பாதம்வரை, உடல் முழுவதும், இரவில் தடவி, காலையில் குளிக்க வேண்டும்.

வாய் அம்மை : வாய் அம்மை என்பது, ‘வைரஸ்’ கிருமியால் ஏற்படுகிறது. இது குழந்தை முதல் பெரியவர்கள் வரை, எவருக்கும் ஏற்படலாம். உதடுகளின் மீது கொப்புளங்களாக வந்து, 5 தினங்களுக்குள் மறைந்து விடும். கொப்புளங்கள் வருவதற்கு முன்பு, காய்ச்சல் வரலாம். இது வராமல் தடுக்கத் தேவையான மருந்துகள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.

அக்கி : சின்ன அம்மையை ஏற்படுத்துகின்ற வைரஸ் கிருமியால் உண்டாகும் இந்த நோய், எந்த வயதினருக்கும் வரலாம். இந்தக் கிருமி, நரம்புகள் மூலம் பரவுவதால், சிறு கொப்புளங்களாக, உடலில் ஒரு பகுதியில் மட்டும் இந்த நோய் வரும். கொப்புளங்கள் 15 தினங்களில் மறைந்து விடும். கொப்புளங்கள் இருக்கும்போதும், மறைந்து சில வாரங்களும் வலி இருக்கும். வலியைக் குறைக்கும் மாத்திரைகள் தவிர, மற்ற மாத்திரைகள் இதற்குத் தேவையில்லை.

கரப்பான் : இந்த நோய் உண்டாகப் பல காரணங்கள் உள்ளன. உடலில் படக்கூடிய பொருள்கள், உண்ணும் உணவு, மருந்துகள் போன்றவையும், இந்த நோய் ஏற்படக் காரணமாகும். தலை முதல் கால்வரை, எந்தப் பகுதியிலும் இந்த நோய் தாக்கும். இது தொற்றுநோய் அல்ல. நமக்கு ஒவ்வாத பொருட்களைத் தவிர்ப்பதன் மூலம், இந்த நோயைக் கட்டப்படுத்தலாம். டாக்டர்கள் ஆலோசனை பெற்றே மருந்துகளை உண்ண வேண்டும்.

தொழுநோய் : ‘லெபரா பேசிலஸ்’ என்ற கிருமியால் ஏற்படும் தொழு நோயைக் கூட்டு மருத்துவமுறை