பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

71

சங்கிலி சர்க்கஸ் சுகுமாரனுடையதென்று இவரே சொல்கிறார். அதற்கு அத்தாட்சியாக இவர் பெயரே இதிலும் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பாவம், இந்த வைரச் சங்கிலி போலி நகை! இதில் வைரமும் இல்லை; தங்கமும் இல்லை. யானை தன் தலையில் தானே மண்ணைக் கொட்டிக் கொண்டுவிட்டது. பொய்யாக கேஸ் கொடுத்த இந்த சுகுமார் மீது மான. நஷ்ட வழக்கும் தொடரப்பட வேண்டும். பாவம், இவரையும் மன்னிக்கிறேன். இனியும் இந்த சுகுமாரன் திருந்தவில்லை யென்றால், மறுபடியும் கம்பி எண்ணாமல் இவர் தப்பவே முடியாது! சிறுவன் பூபாலனை இப்போதே விடுதலை செய்கிறேன்.”

அடுத்த மின்வெட்டும் இடைவேளையிலே மற்றுமொரு எதிர்பார்க்காத சம்பவம் நடந்தது.

அவசரத் தந்தியொன்று வந்தது.

மாஜிஸ்டிரேட் உத்தரவு போட்டார்.“எஸ். ஐ! அந்தச் சர்க்கஸ்கார் சுகுமாரை உடனே கைது செய்யுங்கள்!”