பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10. கோஹினு!.ர் - i பூவைமா நகரில் எங்கு பார்த்தாலும் ஆனந்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. அதற்குரிய காரணங் கள் - அவ்வூர் ஆரம்பப் பள்ளி, உயர்தர ஆரம்பப் பள்ளியாக அன்றுதான் உயர்த்தப்பட்டது. அந்தக் கிராமத்தில் அன்றைக்குத்தான் புதிதாக தபாலாபீஸ் திறக்கப்பட்டது. பிறகு, சந்தோஷத் துக்குக் கேட்க வேண்டுமா, என்ன? புது உலகிலேயே சஞ்சரிப்பதாக அப் பொழுது பூபாலனுக்குத் தோன்றியது. 'போன வாரம் இதே நேரத்துக்கு அறந்தாங்கி ஜெயிலிலே அடைப்பட்டுக் கிடந்தேன். ஆண்டவன் புண்ணியத்திலே தலைக்கு வந்தது தலைப்பாகையோடே போயிடுச்சு. நல்லவங்க ஒரு நாளும் கெடுவதில்லைன்னு தமிழ் வாத்தியார் அடிக்கடி பாடம் படிச்சுக் கொடுப்