பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 கடவுள்

                     கருத்துலகம்
   இன்னும் வேதாந்தம் நம்மிடை வாழ்கின்ற மெய்பொருளாக விளங்குகிறது. வேதாந்தம், பெரு வழக்த்தின் ஊடாக விளங்குதற்குக் காரணம் வேதாந்தம் தனித்த கொள்கையாக மட்டும் அல்லாமல் வாழ்க்கை நெறியாகவும் இயல்பாக ஆய்கின்ற ஆழ்ந்த சிந்தனை யாகவும், வாழ்க்கையின் உயர்ந்த இலட்சியத்துக்கு உரிய வழியாகவும் வேதாந்தம் விளங்குகிறது. வேதாந்தக் கருத்துமுறைகளுள் மூன்று கருத்து முறைகள் பெரிதும் ஆளுமையுடையன. அவை

அத்துவிதம், துவிதம், விசிஷ் டாத்தைவிதம் என்பனவாகும்.

  அத்துவிதம், பெருவழக்கத்தில் இருத்தலால் வேதாந்தம் சில சமயங்களில் அத்துவிதம் என்றே கருதப் பெற்றது. துவிதம், கடவுட்கொள்கையை மெய்ப்பொரு ளியல் முறையில் மிகவும் சிறப்பாக விளக்குவதாகும். துவிதத்தில் சில சித்தாந்தங்கள் பிடிவாதமாகக் கடைப் பிடிக்கப்பெறுகின்றன. உலகம் உண்மையை என துவிதம் ஏற்கின்றது. எனினும் துவிதம் இறை உண்மையை ஏற்கும் மெய்ப்பொருளை முறையில் மிகவும் சிறப்பாக விளக்கு கிறது. துவிதத்தில் சில சித்தாந்தங்கள் பிடிவாதமாகக் கடைப்பிடிக்கப் பெறுகின்றன. உலகு உண்மையைத் துவிதம் ஏற்கின்றது. எனினும் துவிதம் இறை உண்மையை ஏற்கும் மெய்ப்பொருளின் விளக்கங்களின் சிறந்த