பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. லா, ச. ரா.வும் மெளனியும் சிறுகதைக் கலையில் அற்புதங்களைச் சாதித்துள்ள படைப்பாளிகள் மெளனியும், லா, ச. ரா.-வும் விசேஷமான வர்கள். அவ்விருவரது சிறுகதைகளையும் ஒப்பிட்டு ஆராய்லது இலக்கிய மாணவர்களுக்குப் பயனுள்ள விஷயமாக அமைய லாம். இருவரும் தனி நபர்களின் அக உளைச்சல்களையும், சிந்தனைகளையும், நினைவு ஒட்டங்களையும் திறமையோடு சித்திரித்திருக்கிரு.ர்கள். ஆண் பெண்ணை எண்ணி ஏங்கு வதை உணர்ச்சி பூர்வமாகக் கதையாக்கியிருக்கிரு.ர்கள் . மெளனியை விட, வா. ச. ரா. அதிகமான விஷயங்களை -பலதரப்பட்ட விஷயங்களை-கதைப் பொருளாக்கியிருக் கிருர், லா.ச.ரா. கதை கூறும் முறையிலும் வெவ்வேறு உத்திகளைக் கையாண்டிருக்கிரு.ர். கொச்சை நடையை மிகுதியாகப் பயன்படுத்தியிருக்கிரு.ர். உரையாடல், நினைவு கூர்தல் ரீதியில் அதிகம் எழுதியிருக்கிரு.ர். இத்தகைய தன்மைகள் பலவற்றையும் சுவைத்து ஒப்பிடுவது இலக்கிய ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான விஷயம் ஆகக்கூடும். அவ்வித ஆய்வில் ஈடுபடுவது என் நோக்கம் அல்ல. நான் எடுத்துக் கொண்டுள்ள விஷயத்துக்குவசனநடை-சம்பந்தப்பட்ட சில அம்சங்களை மட்டுமே இங்கு எடுத்துச்சொல்ல விரும்புகிறேன்.