பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$44 பாதிக்குப் பின் வீசக்தியும் நம்பிக்கை வரட்சியும் தொனிக்கும் விதத்தி லேயே மெளனி தமது கதைகளைப் படைத்திருக்கிருர், அதற்கு ஏற்ருற்போல்தான் அவருடைய எழுத்து நடையும் அமைந்திருக்கிறது. ஒரு பெண் தெய்வ வழிபாட்டில் ஈடுபட்ட நிலையை, அவளால் வசீகரிக்கப் பெற்றவன், கூறுவது போல மெளனி ஒரு கதையில் வரிளிைக்கிரு.ர். "அது திருவிழா தாள் அல்ல. அவளும் வந்திருந் தான். - அவள் பின்ளுேடு தான் சென்றேன். அநேகம் தரம், அவளைத் தொடக்கூடிய அளவு, அவ்வளவு சமீபம் நான் நெருங்கியதும் உண்டு, அடிக்கடி என் வாய் ஏதோ முனு. முணுத்ததும் உண்டு. அது, எதையும் சொல்வதற்கல்வ. என்பது எனக்குத் தெரியும். ஏனெனில் சொல்லுவதற்கு ஒன்றுகில்லே. ஈசுவர சந்நிதியில் நின்று, தலகுணிந்து, அவள் மெளன மாகத் தியானத்தில் இருந்தாள். அவளுக்குப் பின், வெகு சமீபத்தில் நான் நின்று இருந்தேன். அவளுடைய கூப்பிய கரங்களின் இடை வழியாகக் கர்ப்பக்கிருக சர விளக்குகள் மங்கி வெகு தூரத்திற்கு அப்பாலே பிரகாசிப்பதைக் கண்டேன். அவள் கண்கள், விக்கிரகத்திற்குப் பின் சென்று வாழ்க்கையின், ஆரம்ப இறுதி எல்லைகளைத் தாண்டி இன்ப கத்தைக் கண்டு களித்தன போலும். எவ்வளவு நேரம் அப்படியோ, தெரியாது. காலம் அவள் கருவில் அந்தச் சந்திதியில் சமைந்து நின்றுவிட்டது. - - தியானத்தினின்றும் விடுபட்டு என் பக்கம் அவள் திரும்பியபோது, ஒரு பரவசம் கொண்டவனே போல் - என்னேயும் அறியாமலே உனக்காக நான் எது செய்யவும்