உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

பாரதிக்குப் பின்

இந்த வாக்கியமே வாசகரை சிரமப்படுத்தக் கூடிய ஒரு நடையில் தான் அமைந்திருக்கிறது. அறிவு ரீதியான விஷயங்களை எழுதும் போது சிரமப்படுத்தும் சிக்கலான நடை தோன்றுவது இயல்பு என்பது செல்லப்பாவின் கருத்து ஆகும்.

உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட கதைகளில் நடை இனிமையாய் நேரானதாய், எளிதில் வாசிக்கக் கூடியதாய் இருக்கலாம்; இருக்கும். ஆனால் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்படுகிற விஷயங்களில் நடை வேறு விதமாகத்தான் இருக்கும். கதைகளில் கையாளப்படுகிற நடையை சிந்தனா பூர்வமான கட்டுரைகளில் எதிர்பார்க்கக் கூடாது. இது அவருடைய நோக்கு.

இதை அவர் தனது எழுத்துக்களில் தீவிரமாகவே கையாண்டார். செல்லப்பாவின் கதைகளில் எளிமையான, இனிய உரைநடையைக் காண்கிற வாசகர்கள் அவருடைய கட்டுரைகளில் சுற்றி வளைத்துச் சொல்கிற—சிரமப்பட்டு வாசித்து விளக்கிக்கொள்ள வேண்டிய—தெளிவாகச் சொல்லவேண்டிய, சொல்லிவிடக் கூடிய விஷயங்களைக் கூடக் குழப்பம் உண்டாக்கும் வகையில் விவரிக்கிற—வித்தியாசமான நடையைத்தான் காண்பார்கள். உதாரணத்துக்கு ஒன்று தருகிறேன்:

“இந்த ஏன் என்ற ஒரு கேள்வி நிலை கதையின் ஆரம்பம் முதல் கடைசிவரை மென்மையாக நொய்மையாக (ரஷ்யப் படைப்பாளி ஐவான் துர்க்கனேவ்வின் ‘பொய்’, ‘மவுனம்’ இரண்டில் காணப்படுவது போல) சுதாவாக எழுத்து நம்மை பாதிப்பதற்கு பதிலாக, ஆசிரியரின் தலையீட்டினால் பன்னிப் பன்னியும் தேவைக்கு மீறியும்—அதாவது உணர்த்தலுக்குப் போதியதுக்கு மேல் விண்டு சொல்ல விரும்புகிற ஒரு அப்பட்டத் தன்மையுடன்—நமக்கு சங்குப் பாலா