பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேசியக் கவி

35

உன்னை கேட்பேன் ஒருசேதி
உரிமைப் பெண்ணின் நன்மகளே
தின்னத் தீனி தந்திடுவேன்
தெரிவிக்காமல் ஓடாதே
உன்னைப் போலே இன்பத்தில்
ஊறும் வகைதான் என்னேடி?

கழுத்துப்பட்டை தாங்கி வடுப்பட்டுத் திரியும் சீமான் வீட்டு வெள்ளை நாயைப் பார்த்துத் தெருவில் சுதந்திரமாகத் திரியும் கறுப்புநாய் கேலி செய்வது போல ஒரு பாடல்:

அடிமை யாய்நீ இருப்பதேன்?
கதிதான் கெடநீ நடப்பதா?
கட்டுப் பட்டுக் கிடப்பதா?
சதிராய் உன்னிடம் அண்டேனே
சதையில் ரத்தம் சுண்டேனே!

மணமக்களுக்குத் தேசியக் கல்யாண வாழ்த்துப் பாடல்:

வாழ்க தம்பதிகள் வாழ்கநற் கற்றமே
வாழ்க நற்பாரத சோதரர் முற்றுமே!
வாழ்க நற்பாரத தேசமும் புவியும்
வாழ்க எவ்வுயிரும் நனி வாழ்க!

ஆண்பிள்ளை தாலாட்டு:

வேளைக்கு வேளை விறல் வளரும் பாரதனே!
அமுதம் உனக்குப் பாரதத்தாய் அன்பெல்லாம்
இன்பம் உனக்குப் பாரதப்போர் ஏற்பதிலே.
வெல்வம்என்று நீதான் விழிதுயில்வாய் பாரதனே.