பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

பாரதிதாசன்

தமிழின்பத்தில் ஈடுபடும்போது அதனால்தான்

எங்கள் உடல் பொருள் ஆவியெல்லாம் - எங்கள்
இன்பத் தமிழ் மொழிக்கே தருவோம்
மங்கை ஒருத்தி தரும் சுகமும் - எங்கள்
மாத்தமிழுக் கீடில்லை என்றுரைப்போம்

என்று தமிழின்பத்துக்குச் சிறப்புக் கொடுத்துப் பாடுகிறார்.