பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயற்கைக் கவிஞர்

75

'ஏந்தும் வான் வெள்ளத்தில்
கலக்கும் இன்ப வெள்ளம்'

என்று வானம் பாடியின் குரலைக் குறிப்பிடுகிறார்.

விண்ணையும் மண்ணையும் இன்ப வெள்ளத்தில் நனைக்கும் வானம்பாடியோடு பேசவேண்டும் என்ற ஆவல் கவிஞருக்கு ஏற்படுகிறது. பேசவும் செய்கிறார். வானம்பாடியிடம் பேசும் கடைசி இரண்டு வரிகள் இப்பாடலின் உயிர்நாடியாக அமைகின்றன.

அசையா மகிழ்ச்சி
அடைகநீ உன்றன்,
இசை மழையால்
இன்புறுவோம் யாம்!

என்று பாடலை முடிக்கிறார். கீட்சு, நைட்டிங்கேலின் பாடல் அமரத்தன்மை (immortality) வாய்ந்தது என்றும், மக்கள் வாழ்க்கை துன்பமும் சாவும் நிறைந்தது என்றும் பாடுகிறான். இங்குப் பாரதிதாசன் வானம்பாடியின் மகிழ்ச்சியை அசையா மகிழ்ச்சி என்று குறிப்பிட்டு அதன் நிலைபேற்றை நம் உள்ளத்தில் நினைவு படுத்துகிறார். இத்தொடர் மூலம் மனிதனின் மகிழ்ச்சி அசையும் மகிழ்ச்சி என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்.

வானம்பாடியின் பாடலைக் கேட்டபோது ஏற்படும் இன்பம் கலந்த வியப்பு, குயிலின் பாடலைக் கேட்டபோதும் பாரதிதாசனுக்கு ஏற்படுகிறது.

ஆக்காத நல்லமுதா!
அடடாநான் என் சொல்வேன்
விட்டுவிட் டொளிக்கு மொரு
மின்வெட்டுப் போல்நறவின்
சொட்டுச் சொட் டொன்றாகச்
சுவையேறிற் றென் காதில்

என்று பாடுகிறார். இவ்வளவு சுவையான குரலை வெளிப்படுத்தும்