பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

பாரதிதாசன்


அந்த இசை ஒரு குன்றிலிருந்து மற்றொரு குன்றிற்கும், ஓர் இளமரக் காட்டிலிருந்து மற்றோர் இளமரக் காட்டிற்கும் சுற்றிச் சுற்றி வந்தது. அந்த இசைப் பயணத்தைப் பொருத்தமான சொற்றொடர் ஒன்றால் குறிப்பிடுகிறான் வோர்ட்ஸ் வொர்த், "Wandering Voice" என்பது அச்சொற்றொடர்.

வோர்ட்ஸ்வொர்த்துக்கு ஏற்பட்ட அதே மயக்கம் வானம்பாடியின் இன்னிசையைக் கேட்ட பாரதிதாசனுக்கும் ஏற்பட்டிருக்கிறது. அவரது பாடலைக் கேளுங்கள்

வானந்தான் பாடிற்றா? வானிலவு பாடிற்றா?
தேனை அருந்திச் சிறுதும்பி மேலேறி
நல்லிசை நல்கிற்றா? நடுங்கும் இடிக்குரலும்
மெல்லிசை பயின்று மிக இனிமை தந்ததுவோ?
வானூர்தி மேலிருந்து வல்ல தமிழிசைஞன்
தானுதும் வேய்ங்குழலா? யாழா தனியொருத்தி
வையத்து மக்கள் மகிழக் குரலெடுத்துப்
பெய்த அமுதா?

என்று அடுக்கிக் கொண்டே போகிறார். வோர்ட்ஸ் வொர்த் காடுமே டெல்லாம் தேடித் திரிந்தும் கக்கூவைப் பார்க்க முடியவில்லை. ஆனால் வானம்பாடி கண்ணுக் கெட்டாத தூரத்தில் பாரதிதாசனுக்குக் காட்சி வழங்கியது.

உன்றன் மணிச்சிறகும் சின்ன கருவிழியும்
என்றன் விழிகட்கே எட்டா உயரத்தில்
பாடிக் கொண்டே இருப்பாய்

என்று பாடுகிறார்.

கவிஞன் கீட்சு நைட்டிங்கேலின் இனிய குரலுக்குப் போதை தரும் மதுவையும் கவிதையையும் ஒப்பிடுகிறான்; கொஞ்சங் கொஞ்சமாக உயிரைக் கொள்ளை கொள்ளும் 'ஹெம்லாக்' என்ற நஞ்சையும் ஒப்பிடுகின்றான். ஆனால் பாரதிதாசன்