இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
74
பாரதிதாசன்
மண்ணாங்கட்டி:
அத்தனையும் சரி. அத்தனையும் சரி.
எப்போது திருமணம் ஏற்படக் கூடும்?
புரோகிதன் :
இந்தவைகாசி எட்டுத் தேதிக்கு
முந்தியே திருமணம் முடிந்திடவேண்டும்.
மண்ணாங்கட்டி :
அத்தனை விரைவிலா? அத்தனை விரைவிலா?
புரோகிதன் :
நடுவில் ஒரேஒரு தடையிருப்பதால்
ஆடியில் திருமணம் கூடுதல் உறுதி.
வெள்ளையப்பன் :
அப்படிச்சொல்லுக அதுதானே சரி.
மண்ணாங்கட்டி :
மணப்பெண் என்ன பணக்காரி தானா?
புரோகிதன் :
மணப்பெண் கொழுத்த பணக்கா ரன்மகள்.
பெற்றவர்கட்கும் உற்றபெண் ஒருத்திதான்.
மண முடிந்தபின் மறுமா தத்தில்
ஈன்றவர் இருவரும் இறந்துபோ வார்கள்.
பெண்ணின் சொத்து பிள்ளைக்கு வந்திடும்.