உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

பாரதிதாசன்


மண்ணாங்கட்டி:

அத்தனையும் சரி. அத்தனையும் சரி.
எப்போது திருமணம் ஏற்படக் கூடும்?

புரோகிதன் :

இந்தவைகாசி எட்டுத் தேதிக்கு
முந்தியே திருமணம் முடிந்திடவேண்டும்.

மண்ணாங்கட்டி :

அத்தனை விரைவிலா? அத்தனை விரைவிலா?

புரோகிதன் :

நடுவில் ஒரேஒரு தடையிருப்பதால்
ஆடியில் திருமணம் கூடுதல் உறுதி.

வெள்ளையப்பன் :

அப்படிச்சொல்லுக அதுதானே சரி.

மண்ணாங்கட்டி :

மணப்பெண் என்ன பணக்காரி தானா?

புரோகிதன் :

மணப்பெண் கொழுத்த பணக்கா ரன்மகள்.
பெற்றவர்கட்கும் உற்றபெண் ஒருத்திதான்.
மண முடிந்தபின் மறுமா தத்தில்
ஈன்றவர் இருவரும் இறந்துபோ வார்கள்.
பெண்ணின் சொத்து பிள்ளைக்கு வந்திடும்.