இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கதைப் பாடல்கள்
75
மண்ணாங்கட்டி :
எந்தத் திசையில் இருக்கின் றாள்பெண்?
புரோகிதன் :
வடகிழக்கில் மணப்பெண் கிடைப்பாள்.
தொலைவில் அல்ல தொண்ணூறு கல்லில்.
மண்ணாங்கட்டி :
அப்படியானால் அரசலூர் தானா?
புரோகிதன் :
இருக்கலாம் இருக்கலாம் ஏன் இருக்காது?
வெள்ளையப்பன் :
எப்போது கிளம்பலாம் இதைவிட்டு நானே?
மண்ணாங்கட்டி :
எப்போது கிளம்பலாம் இதைவிட்டு நாங்கள்?
வெள்ளையப்பன் :
யான் மட்டும்போகவா? இருவரும்போகவா?
புரோகிதன் :
நாளைக் காலையில் நாலு மணிக்கு
நீவிர் மட்டும்போவது நேர்மை:
நாழிகை ஆயிற்று நான்போக வேண்டும்.