இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கதைப் பாடல்கள் 75
மண்ணாங்கட்டி :
எந்தத் திசையில் இருக்கின்றாள்பெண்? புரோகிதன் :
வடகிழக்கில் மணப்பெண் கிடைப்பாள். தொலைவில் அல்ல தொண்ணுறு கல்லில்.
மண்ணாங்கட்டி :
அப்படியானால் அரசலூர் தான்ா? புரோகிதன் :
இருக்கலாம் இருக்கலாம் ஏன் இருக்காது?
வெள்ளையப்பன் :
எப்போது கிளம்பலாம் இதைவிட்டு நானே? மண்ணாங்கட்டி :
எப்போது கிளம்பலாம் இதைவிட்டு நாங்கள்?
வெள்ளையப்பன் :
யான் மட்டும்போகவா? இருவரும்போகவா? புரோகிதன் :
நாளைக் காலையில் நாலு மணிக்கு நீவிர் மட்டும்போவது நேர்மை: நாழிகை ஆயிற்று நான்போக வேண்டும்.