பக்கம்:பாரதிதாசன் கவிதைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

IV

உயர்வுபெற்று, உயர்ந்தோங்கிச் சிறந்திட, அவர் தமது வாழ்நாளில் வழங்கிய தமிழ் உணர்வு ததும்பும் பாடல்களை யெல்லாம் தொகுத்துப் 'பாரதிதாசன் கவிதைகள்', 'தமிழ்' என்ற நூலாக வழங்குகின்றோம். இவ்வரிய நூலினை ஏற்று, ஏற்றமும் எழிலும் பெற்றுக் கவிஞரின் எண்ணக் கோட்டத்தை எழில் பொங்கும் கலைக்கோட்டமாகக் காத்து மகிழ்ந்திட இருகரம் கூப்பி அழைக்கின்றோம் அன்புடன்.

தமிழ்க்கவியின் இலக்கியங்கள் அனைத்தையும் நாட்டுடைமையாக்கித் தமிழர் உள்ளத்தில் தமிழ்ப் புரட்சியுணர்வுகள் எளிதில் ததும்பிட உதவிய தமிழ் உள்ளங்களுக்கு எங்கள் நன்றி.

டாக்டர் ப. ஆறுமுகம்
பதிப்பாசிரியர்.