பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாலாட்டுப்பாடல்கள்

55


அப்பர் :

(12 கண்ணிகள், முதலெழுத்துக்கள் க - ஔ ஆகிய வரிசையில் அமைந்துள்ளன.)

ஐய னெனத்துதிசெய் அப்பூதி சேயை முனம்
வையமிசை வரவழைத்த வான்புகழும் நற்றவனோ,

ஒண்ணகைசேர் திலகவதி யுடன்தோன்றிச்
சூலைகெடப்
பண்ணிற் “கூற்றாயினவா” பாடுசிவ பாக்கியனோ.

சுந்தரர் :

(12 கண்ணிகளின் முதலெழுத்துக்களும் அகரமாகவே செய்யப் பெற்றுள்ளன.)

அரனளித்த அரும்பொருள்கள் அனைத்தையும்
ஆற்றிட்டு நன்னீரு பரவியதோர் தடத்தெடுத்த பாக்கிய
சிகாமணியோ அருமறைசொல் குண்டையூ ரானருளம்
அரிகுற்றுப் பெருமைமிக பூதகணம் பெற்ற அருட்
பெருந்தகையோ

மாணிக்கவாசகர் :

(12 கண்ணிகளின் முதலெழுத்தும் க-கௌ வரிசையில் அமைந்துள்ளன.)

கிள்ளைகள் பண் செய்மதுரைக் கீர்த்தி மிக்க பாண்டியனார்
வெள்ளை மதிச் சடையனடி மேவச்செய் வித்தகனோ
கொண்டலென் உயிர்கள்களி கொள்ள உயர்