இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
16
பாரதிதாசன் பரம்பரை
தோழர் புத்தனேரி ரா. சுப்பிரமணியன் நல்ல தமிழ்த் தொண்டர், தமிழகம் விடுதலை பெறுவதில் அவருக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. எழுச்சி பயக்கத்தக்க கவிதைகள் பல இயற்றியிருக்கிறார். ‘வானம்’ அவர் இயற்றியது.
—ஆசிரியர்
வானம்
வையத்தின் விரிகுடையாய், வானமே!
உன்னிலையை மதிப்ப தென்றால்
மையத்தைக் காணோமே! பிடிகம்பும்
கம்பிகளும் வாய்த்தல் இன்றே!
மெய்யான குடையாயின் வெயில்தடுக்க
வேண்டாமோ? உன்னைத் தாண்டிப்
பெய்மாரி ஒழுகுவதேன்? பெருங்காலம்
உழைத்துடலும் பீற்றல் ஆச்சோ?
நீலஞ்சேர் விதானத்துப் பந்தலெனக்
கூறுவது நேர்மை யென்றால்
காலில்லாப் பந்தலுமெக் காலத்தும்
நிலைக்குமெனக் கருதற் கில்லை!
வேலையென விரிகுளமோ! விண்மீன்கள்
அல்லிபல விரிந்த பண்போ?
காலத்தை உண்டாக்கும் அகன்றபெருங்
கருவியெனக் கழற லாமோ?