இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
114
பாரதி தமிழ்
குறிப்பு:- இதுவரை வந்துள்ள பாடல்களைப் படிக்கும் போது கவிதைத் தொழிலிலே பாரதியாரின் ஆரம்ப நிலை மனத்திலே தெளிவாகப் புலனாகும். இப் பாடல்களில் புகுந்துள்ள சில சொற்களுக்குப் பொருள் எழுத வேண்டியது அவசியமென்று கருதிப் பாரதியாரே பாடலின்கீழ் அவற்றை விளக்கியிருக்கிறார். இவ்வாறு தொடங்கிய கவிதை ஒன்றிரண்டு ஆண்டுகளிலே ஆச்சரியமான முறையிலே முழு மலர்ச்சி பெறுகின்றது. அவ்வாறு மலரும் பாரதியாரின் கவிதா சக்தி இப்பாடல்களிலும் மின்னலிடுவதைக் கண்டு சுவைக்கலாம்.