பக்கம்:பாரதித் தமிழ்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I36 பாரதி தமிழ்

இந்நூலைப்பற்றி திரு எஸ். ஜி. இராமாநுஜலு நாயுடு கூறுவதாவது: “அதன் பின்னர் பாஞ்சாலி சபதம் என்ற அரிய நூலே .ெ வ ளி யி ட் டார். அதிலுள்ள ரஸத்தை என்னென்று புகழ்வோம்! அதற்கு அதுவே நிகர். அதை முதற்பாகமாகத்தான் வெளியிட்டார். இரண்டாம் பாகம் பார்க்கத் தமிழ் நாட்டிற்குப் பாக்கியமில்லை.”

1921-ஆம் ஆண்டுவரை இந்நூலின் இரண்டாம் பாகம் வெளியாகவில்லை என்று அவர் கூறுவதி லிருந்து தெரிகிறது. இப்பொழுது பாஞ்சாலி சபதம் முழுவதும் இரண்டு பாகங்களாக நமக்குக் கிடைத் துள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/135&oldid=605395" இலிருந்து மீள்விக்கப்பட்டது