உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107

கிறது. ‘வித்வான்’ ‘வாதாபி கணபதிம்’ என்று ஆரம்பஞ் செய்கிறார். ‘ராம நீ ஸமான மெவரு’, ‘மரியாத காதுரா’ ‘வரமு லொஸகி’ ஐயையோ, ஐயையோ! ஒரே கதை.

எந்த ஜில்லாவுக்குப் போ, எந்த கிராமத்திற்குப் போ, எந்த ‘வித்வான்’ வந்தாலும், இதே கதைதான். தமிழ் நாட்டு ஜனங்களுக்கு இரும்புக் காதாக இருப்பதால், திரும்பத்திரும்பத் திரும்பத்திரும்ப ஏழெட்டுப் பாட்டுக்களை வருஷக்கணக்காகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தோற்காது உள்ள தேசங்களிலே இந்தத் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

“பூர்விக மஹான்களுடைய பாட்டுக்களை மறந்து போய் விடவேண்டும்” என்பது என்னுடைய கக்ஷியன்று. அவற்றை அர்த்தத்துடன் பாடவேண்டும். பதங்களைப் பிழையாக உச்சரிக்கக் கூடாது. பதங்களை வாய்விட்டுத் தெளிவாகச் சொல்ல வேண்டும். விழுங்கிவிடக்கூடாது. பத்து முப்பது கீர்த்தனங்களையே ஓயாமற் பாடி, ஸங்கீதத்தை ஒரு தொல்லையாகச் செய்துவிடக்கூடாது” என்று மேலும் சொல்லுகிறார்.

“புதிய புதிய கீர்த்தனங்களை வெளியே கொண்டுவர வேண்டும். இப்போது ஸங்கீத வித்வான்களிலே தலைமைப் பட்டிருப்போர் தமிழிலே புதிய மெட்டுக்களில் கீர்த்தனங் கள் செய்ய முயலவேண்டும். நவரஸங்களின் தன்மைகளையும், இன்னின்ன ராகங்களை, இன்னின்ன விதங்களிலே பாடினால், இன்னின்ன ரஸங்கள் உண்டாகும் என்பதையும் கற்றுத் தெரிந்துகொள்ளுதல் அவசியம்” என்பது பாரதியாரின் கருத்து.

“பூர்வகாலத்து மஹான்களுக்குத் தெய்வப் பிரஸாதமிருந்தது. எங்களுக்கில்லையே? என்ன செய்வோம்? என்று புதிய வித்வான்கள் புதிய கீர்த்தனங்கள் அமைப்பதிலே