பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 யில்லை. எனக்கு ஸ்ாதாரணமாகவே உழைப்பு அதி: மாதலால், அத்துடன் சோறும் விழுங்க முடியாமற் போகவே, சோர்வும் முகக் கடுகடுப்பும் அதிகப்பட்டன. இத்யாதி, இத்யாதி. நாள் தவறிலுைம், இந்தக் கணக்குத் தவறுவதில்லை, சீச்சி! இந்த மண்ணுலகம் ஒரிடமா? இதில் மனிதன் வசிக், லாமா? ஆமைகளும் ஒநாய்களும் வாழலாம். இது துன்பு களம். இது சிறுமைக் களஞ்சியம். இது நரகம். இதில் வெறுப்படையாத மனிதர்களின் முகத்திலேகூட விழிக்: லாகாது. வீட்டு வியாபாரங்களையும் எனது சொந்த வர்த்து மானங்களையும் குறித்துச் சில திருஷ்டாந்தங்கள் காண்பி; தேன். இனி, வெளி வியாபாரங்கள், எனது மித்திரர் அயலார் முதலியவர்களின் செய்திகள் லம்பந்தமாகச் சி. திருஷ்டாந்தங்கள் காண்பிக்கிறேன். திருவல்லிக்கேணி யிலே செ......ஸங்கம் என்பதாக ஒர் தேசபக்தர் ஸ்.ை உண்டு. அதில் தேசபக்தர்கள்தான் கிடையாது. நானும் சிற்சில ஐயங்கார்களுமே சேர்ந்து, 'காரியங்கள்-ஒ! காரியமும் நடக்கவில்லை - நடத்தினுேம். நாங்கள் தே பக்தர்கள் இல்லையென்று, அந்தச்சபை ஒன்றுமில்லாம போனதிலிருந்தே நன்கு விளங்கும். நான் சோம்பருக்குத் தொண்டன். எனது நண்ப களெல்லாம் புளியஞ்ச்ோற்றுக்குத் தொண்டர்கள். சில மட்டிலும் பணத்தொண்டர்; காலணுவின் அடியார்க்கு அடியார். ஆனால், எங்களிலே ஒவ்வொருவனும் பேசுவதை கேட்டால் கைகால் நடுங்கும்படியாக இருக்கும். பண தொண்டரடிப் பொடியாழ்வார் எங்களெல்லோரிை