இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பாரதியின்
பாரதியார் திருக்குறள்களையே மிகுதியான இடங்களில் மேற்கோளாக அமைத்துள்ளார். அவற்றையும் தமது கட்டுரைகளிலே மிகுதியாகக் காணலாம்; கவிதைகளில் குறட்பாவையும் குறட் கருத்தையும் பின்னியுள்ளார்.
தனது வரலாற்றைக் கூறும் “சுய சரிதை” (43)யில்
- “பொருளி லார்க்கிலை யிவ்வுல” கென்ற நம் புலவர் தமிழ்மொழி பொய் மொழி யன்றுகாண்.
-எனத் திருக்குறள் (247) தொடரை அமைத்தார்.
- “பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
- நாகரிகம் வேண்டு பவர்” (580) என்னும் குறளின்
கருத்தை, ‘அச்சமில்லை’ தலைப்பில் அமைந்த ‘பண்டாரப் பாட்டில்’,
- “நச்சைவாயி லேகொணர்ந்து நண்ப சூட்டுபோதிலும்
- அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே”
என அமைத்தார்.
கட்டுரைகளில் திருக்குறள் மேற்கோள் பல்லிடங்களில் பாரதியால் அமைக்கட்பட்டுள்ளது. சான்றிற்கு ஒன்று:
“......... புத்தகத்துக்கும் வாய்ப்பேச்சுக்கும் செய்கைக்கும் இடையே இலட்சம் யோசனை தூரமாக நடப்பவர்களுக்குத் திருட்டாந்தம் காட்டப் புகுமிடத்தே... ......”
“கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல் வேறு பட்டார் தொடர்பு -என்று” திருவள்ளுவர் பாடியிருக்கிறார்.
58