பக்கம்:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இலக்கியப் பார்வை


“சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்” என்பது கவிதைத் தொழிலில் மிகவும் உயர்ந்த தொழில். இதில் “ஔவை ஒப்பற்றவள்” (தமிழ்நாட்டுநாகரீகம் கட்டுரை) -என ஒப்பற்ற நிலையைக் காட்டினார். இத்துறையில் “ஔவையைப் போன்று ஓர் ஆண்மகன் இதுவரை தோன்றவில்லையே” என்றும் எழுதினார்.

இவ்வாறெல்லாம் தமது உள்ளங்கவர்ந்த தமிழ் மகளாகப் போற்றினும், ஔவையாரது ஆத்திசூடியைப் போன்று இவர் ஒன்று எழுதியது “ஔவையைப் போன்று ஓர் ஆண்மகன் தோன்றவில்லையேஎன்று அங்காந்த அங்காப்பைப் போக்கிக் கொள்ளும் முயற்சியாகவும் இருக்கலாம். மேலும் தாம் போற்றுகின்ற ஒன்றுகொண்டு போற்றப் படுபவரது கருத்தையெல்லாம் ஏற்றுக்கொள்ளுவது தேர்ந்த இலக்கியப் படைப்பாளனது தன்மையாகாது என்பதை உணர்ந்தவர் பாரதியார், இவ்வடிப்படை கொண்டுதான். தமது புதிய ஆத்திசூடியில் இக்காலத்துக்கு ஏலாது என்று அவர் கருதிய ஔவை ஆத்திசூடிக் கருத்திற்கு மாறாகச் சிலவற்றை அமைத்தார்.

“மீதுண் விரும்பேல்” — ஔவையார் ஆத்திசூடி (90)
“ஊன் மிக விரும்பு” — பாரதியார் புதிய ஆத்திசூடி (6)
“முனைமுகத்து நில்லேல்” — ஔவை (91)
“முனைமுகத்து நில்” — பாரதி (43)

இவை மாறுபட்ட கருத்துகள்.

ஆனால் கால மாற்றத்தில் மாற்றிக் காட்டவேண்டியவை எனப் பாரதியார் கருதியவை. மாறுபட்டு மொழிந்தது போன்று ஔவை கருத்தில் திருத்தம் செய்தும் எழுதினார்.

61