பக்கம்:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பாரதியின்


“பாட்டு 124 : “இப்பாட்டின் மொத்தக் கருத்து” என்றும்,
“பாட்டு 69,70 இப்பாட்டுகளின் கருத்து” என்று கருத்தும் கருத்து விளக்கமும் தருவார். இப்பகுதிகள்,
கருத்துரை வகையும்
விளக்கவுரை வகையும் ஆகும்.

இவைபோன்று தமது கட்டுரைப்பகுதிகளில் மேற்கோள் காட்டும் செய்யுள்களுக்கு இன்றியமையாத இடங்களில் கருத்துரையும், பொழிப்புரையும் சொற்பொருளும்வரைந்துள்ளமை எடுத்துக் காணத்தக்கவை.

தமிழ்நாட்டு நாகரிகம் என்னும் கட்டுரையில் “ஈதலறம்” என்னும் ஒளவையர் பாடலைக் காட்டி அதற்கு,

“இவ்வெண்பாவின் கருத்து யாதெனில், ஈதலாவது அருள் செய்தல் அல்லது கொடுத்தல் என்றும் பொருள்படும்” என்று கருத்துரை தந்துள்ளார்.

இக்கட்டுரையிலேயே,
“கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள”
-என்று திருவள்ளுவர் பாடியிருக்கிறார்.

“காண்டல், கேட்டல், உண்டல், மோப்பு, தீண்டுதல் எனும் ஐவகை இந்திரியங்களையும் ஒருங்கே இன்புறுத்தும் இயல்பு ஒளிபொருந்திய வளையணிந்த இப்பெண்ணிடக் தேதானுள்ளது” என்பது அக்குறளின் பொருள்.

66