பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. தமிழருக்குட —*

பின்பு நம்பு. புராணங்களைக் கேட்டுப் பயனடைந்து கொள். புராணங்களை வேதங்களாக நினைத்து மடமைகள் பேசி விலங்குகள் போல் நடந்து கொள்ளதே.

“உனது வேலைகள் அனைத்திலுமே பொய்க்கதைகள் மித மிஞ்சி விட்டன. உனது மதக் கொள்கைகள், லெளகீகக் கொள்கைகள், வைதிக நடை - எல்லா வற்றிலுமே பொய்கள் புகுந்து தலை தூக்கி ஆட இடம் கொடுத்து விட்டாய். இவற்றை நீக்கிவிடு. வீட்டிலும் வெளியிலும் தனிமையிலும் கட்டிடத்திலும் எதிலும் எப்போதும் நேர்மையிருக்க வேண்டும். உண்மையிருக்க வேண்டும். நீயும் பிறரை வஞ்சிக்கலாகாது, பிறரும் உன்னை வஞ்சிக்கலாகாது. பிறர் பிறரை வஞ்சிப்பதையும் நீ இயன்ற வரை தடுக்க வேண்டும். எல்லாப்பேறுகளைக் காட்டிலும் உண்மைப்பேறு தான் பெருமை கொண்டது. உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர். உண்மை சாஸ்திரங்களுக்கெல்லாம் வேர். உண்மை இன்பத்திற்கு நல்லுறுதி. உண்மை பரமாத்மாவின் கண்ணாடி ஆதலால் தமிழா எல்லாச் செய்திகளிலும் உண்மை நிலவும் படி செய்.

தமிழா, எழுதிப் படிப்பதெல்லாம் மெய்யுமில்லை. எதிர் நின்று கேட்பதெல்லாம் பொய்யுமில்லை. “முந்திய சாஸ்திரம் தான் மெய், பிந்திய சாஸ்திரம் பொய் என்று தீர்மானம் செய்து கொள்ளாதே. காலத்துக்கும் உண்மைக்கும் எதிரிடையாக ஓர் கணக்கு ஏற்பட்டிருக்கிறதா? தகப்பன் வெட்டிய கிணறு என்று சொல்லி மூடர்கள் உப்பு நீரைக் குடிக்கிறார்கள் என்று பஞ்சதந்திரம் நகைக்கிறது.

இவ்வுலகில் நான்கு புருஷார்த்தங்கள் என்று பெரியோர்கள் காட்டியிருக்கிறார்கள். அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன.

இவற்றுள் அறமாவது கடமை. அது உனக்கும் உனது சுற்றத்தாருக்கும் பிறர்க்கும் நீ செலுத்தவேண்டிய கடமை “பிறர்” என்பதனுள் வையகம் முழுவதும் அடங்கும். கடமையில் தவறலாகாது.