இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாத பூமி பழம்பெரும் பூமி LZE] சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்த்து சிறந்ததும் இந்நாடே - இதை வந்தனை கூறி மனதில் இருத்தி என் வாயுற வாழ்த்தேனோ - இதை வந்தே மாதரம் வந்தே மாதரம் என்று வணங்கேனோ? என்பதே பாரதியின் தேசீய உணர்வாகும். எனவே பாரதியின் தேசீயம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பாரத தேசத்தின் பண்பாட்டில், பாரம்பரியத்தில் தோன்றி வளர்ந்து மலர்ந்துள்ள தேசியமாகும். அது பாரதியின் இதயத்தில் தாமரையாக விரிந்து மலர்ந்திருந்த தேசியமாகும். அதுவே இந்துத்வ தேசீயம், அதுவே இந்தியத்வ தேசீயம், அதுவே பாரதத்வ தேசீயமாகும். -* _2༄།