பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ் செய்தி யறியாயோ?-நன்னெஞ்சே! குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக் கொடி வளராதோ?-நன்னெஞ்சே! (பகைவ) உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ.-நன்னெஞ்சே தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும் சேர்த்தபின் தேளுமோ?-நன்னெஞ்சே! (பகை) வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது வாழ்வுக்கு நேராமோ?-நன்னெஞ்சே! தாழ்வு பிறர்க்கெண் ைந் தானழிவா னென்ற சாத்திரங் கேள யோ?-நன்னெஞ்சே! (பகைவ) போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர் போலவந் தானுமவன்-நன்னெஞ்சே! நேருக் கருச்சுனன் தேரிற் கசைகொண்டு நின்றதுங்கண்ணனன்ருே?-நன்னெஞ்சே! (பகைவ) தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு சிந்தையிற் போற்றிடுவாய்-நன்னெஞ்சே! அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள் அவளேக் கும்பிடுவாய்-நன்னெஞ்சே! (பகைவ) 7. முரசு வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்கஎன்று கொட்டு முரசே! நெற்றி யொற்றைக் கண்ணனேடே நிர்த்தனம் செய்தாள் நித்த சக்தி வாழ்க என்று கொட்டு முரசே!