பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 ஊருக்கு நல்லது சொல்வேன்-எனக் குண்மை தெரிந்தது சொல்வேன்; சீருக் கெல்லாம் முதலாகும்-ஒரு தெய்வம் துணை செய்ய வேண்டும். வேத மறிந்தவன் பார்ப்பான்-பல வித்தை தெரிந்தவன் பார்ப்பான். நீதி நிலைதவ ருமல்-தண்ட நேமங்கள் செய்பவன் நாய்க்கன். பண்டங்கள் விற்பவன் செட்டி-பிறர் பட்டினி தீர்ப்பவன் செட்டி தொண்டரென் ருேர்வகுப் பில்லை,-தொழில் சோம்பலைப் போல்இழி வில்லை நாலு வகுப்பும்இங் கொன்றே,-இந்த நான்கினில் ஒன்று குறைந்தால், வேலை தவறிச் சிதைந்தே-செத்து வீழ்ந்திடும் மானிடச் சாதி. ஒற்றைக் குடும்பந் தனிலே-பொருள் ஒங்க வளர்ப்பவன் தந்தை; மற்றைக் கருமங்கள் செய்தே-மனை வாழ்ந்திடச் செய்பவள் அன்ன; ஏவல்கள் செய்பவர் மக்கள்:-இவர் யாவரும் ஒர்குலம் அன்ருே? மேவி அனைவரும் ஒன்ருய்-நல்ல வீடு நடத்துதல் கண்டோம் . சாதிப் பிரிவுகள் சொல்லி-அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார், நீதிப் பிரிவுகள் செய்வார்-அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார்.