பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 பகைவனுக் கருள்வாய் - நன்னெஞ்சே! பகைவனுக் கருள்வாய்! புகை நடுவினில் தீயிருப்பதைப் பூமியிற் கண்டோமே - நன்னெஞ்சே! பூமியிற் கண்டோமே. பகை நடுவினில் அன்புரு வானநம் பரமன் வாழ்கின்ருன் - நன்னெஞ்சே! பரமன் வாழ்கின்ருன். கைவ) சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ் செய்தி யறியாயோ? . நன்னெஞ்சே! குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக் கொடி வளராதோ? - நன்னெஞ்சே! (பகைவ) உள்ள நிறைவிலொர் கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ - நன்னெஞ்சே! தெள்ளிய தேனிலொர் சிறிது நஞ்சையும் சேர்த்தபின் தேனுமோ? நன்னெஞ்சே! (பகைவ) வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது வாழ்வுக்கு நேராமோ? - நன்னெஞ்சே! தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற சாத்திரங் கேளாயோ? - நன்னெஞ்சே! (பகைவ) போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர் போலவந் தானுமவன் - நன்னெஞ்சே! நேருக் கருச்சுனன் தேரிற் கசைகொண்டு நின்றதுங் கண்ணனன்ருே? - நன்னெஞ்சே! (பகைவ)