பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்க ளெல்லாம் சொற்பனந் தான? பல தோற்ற மயக்கங்களோ? கற்பதுவே! கேட்பதுவே. கருதுவதே நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? 1 வானகமே, இளவெயிலே, மரச்செறிவே நீங்களெல்லாம் கானலின் நீரோ? - வெறுங் காட்சிப் பிழைதானே? போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே (போனதனல் நானுமோர் கனவோ? - இந்த ஞாலமும் பொய்தானே? 2 காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும் கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் (பொய்களோ? சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் (விதையிலென்ருல், சோலை பொய்யாமோ? - இதைச்சொல்லோடு சேர்ப்பாரோ? காண்பவெல்லாம் மறையுமென்ருல் மறைந்ததெல்லாம் (காண்பமன்ருே? வீண்படு பொய்யிலே - நித்தம் விதிதொடர்ந் திடுமோ? காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் |உறுதியில்லை காண்பது சக்தியாம் - இந்தக் காட்சி நித்தியமாம். 4 31. நான் (குறிப்பு: விண்ணில் தெரிகின்ற மீனெல்லாம் நான்: அனைத்துமே நான் என்கிருர் பாரதியார். இது பெரிய ஆராய்ச்சிக்குரியது. அறிவு ஒன்று கூறும்; ஆனல் அதை