பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

விசேஷமாகப் பயிற்றுவிக்கப் படவேண்டும். (இங்கு நான் மாகாணம் அல்லது ராஷ்ட்ரம் என வகுத்திருப்பது சென்னை மாகாணம், பம்பாய் மாகாணம் முதலிய தற்காலப் பகுதிகளைக் குறிப்பதன்று : பாஷைப் பிரிவுகளுக்கு இசைந்தவாறு வகுக்கப்படும் தமிழ்நாடு, தெலுங்குநாடு, மலையாள நாடு முதலிய இயற்கைப் பகுதிகளைக் குறிப்பது.) இந்தச் சரித்திரங்களில் மஹா கீர்த்திபெற்று விளங்கும் பருவங்களை உபாத்தியாயர்கள் மிகவும் உத்ஸாகத்துடனும், ஆவேசத்துடனும், பக்தி சிரத்தைகளுடனும் கற்பிக்கும்படி ஏற்பாடு செய்யவேண்டும். அதிபால்யப் பிராயத்தில் மனதில் பதிக்கப்படும் சித்திரங்களே எக்காலமும் நீடித்து நிற்கும் இயல்புடையன. ஆதலால், பள்ளிப் பிள்ளைகளுக்கு ஆரம்ப வகுப்பிலேயே நம்முடைய புராதன சரித்திரத்தின் அற்புதமான பகுதிகளே யூட்டி, அசோகன், விக்ரமாதித்யன் ராமன், லக்ஷ்மணன், தர்மபுத்திரன், அர்ஜூனன் இவர்களி டமிருந்த சிறந்த குணங்களையும், அவற்றால் அவர்களுக்கும் அவர்களுடைய குடிகளுக்கும் ஏற்பட்ட மஹிமைகளையும் பிள்ளைகளின் மனதில் பதியும்படி செய்வது, அந்தப் பிள்ளைகளின் இயல்பைச் சீர்திருத்தி மேன்மைப் படுத்து வதற்கு நல்ல ஸாதனமாகும்.

தேச பாஷையின் மூலமாகவே இந்தச் சரித்திரப் படிப்பு மட்டுமேயன்றி மற்றெல்லாப் பாடங்களும் கற்பிக்கப் படவேண்டுமென்பது சொல்லாமலே விளங்கும். தேச பாஷையின் மூலமாகப் பயிற்றப்படாத கல்விக்கு தேசீயக் கல்வி என்ற பெயர் செலுத்துதல் சிறிதளவும் பொருந்தாது போய்விடுமன்றாே? இது நிற்க.

ஹிந்து தேச சரித்திரம் மாத்திரமே யல்லாது ஸெனகர்யப்பட்டால் இயன்றவரை அராபிய, பாரnச