பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. வருங்காலம் உலகம் எவ்வளவு தீவிரமாக மாறிக்கொண்டு வரு கிறதென்பதைத் தமிழ்நாட்டார் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். ஒவ்வொருவரும் சிற்சில விவகாரங்களில் மனத்தைப் பதிய வைத்துக்கொண்டு வெளியுலகத்தின் மாறுதல்களிலே புத்திசெலுத்தாமல் அற்ப விஷயங்களிலும் அற்பச் செய்கைகளிலும் நாளையெல்லாம் கழியவிட்டுக் கிணற்றுத் தவளைகளைப் போல் வாழ்வதிலே பயனில்லை. வர்த்தகஞ் செய்வோர் கோடிக்கணக்கான பணப் பழக்கம் ஏற்படும்படி பெரிய வர்த்தகங்கள் செய்ய வழி தேட வேண்டும். படிப்பவர் அபாரமான சாஸ்திரங்களை யும் பல தேசத்துக் கல்விகளையும் கற்றுத்தர வேண்டும். ராஜ்ய விவகாரங்களில் புத்தி செலுத்துவோர் உலக சரித்திரத்தை நன்முகத் தெரிந்து கொண்டு, மற்ற ராஜ தந்திரிகளும் மந்திரிகளும் கண்டு வியக்கும்படியான பெரிய பெரிய யோசனைகளை செய்து நிறைவேற்றிப் புகழ் பெறவேண்டும். கைத்தொழில்களின் விஷயத்திலே நாம் இப்போது காட்டி வரும் சோர்வும் அசிரத்தையும் மிகவும் அருவருப்புக்கு இடந் தருகின்றன. திருஷ்டாந்தமாக, நேர்த்தியான சித்திரங்களும் வர்ணங்களும் சேர்த்துப் பட்டிலும் பஞ்சிலும் அழகான ஆடைகள் செய்யவல்ல தொழிலாளிகள் நமது நாட்டில் இருக்கிருர்கள். இவர்களுக்குப் படிப்பில்லை; வெளியுலக நிலை தெரியாது. கையிலே முதற் பணமுமில்லை. நமக் குள்ளே கல்வியும் செல்வமும் உடையோர் கூடி ஆராய்ச்சி கள் செய்து வெளிநாடுகளில் ஆவலுடன் வாங்கக்கூடிய