பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 சொல்லாட்சிகள் மரபுகள் தோன்றிக் கொண்டேயிருக் கும். தமிழ் செழித்தோங்கும். ஆனல் முதலில் துணிச்சலாக விதை விதைத்த பாரதியாருக்குகே தமிழ் மறுமலர்ச்சியின் பெருமை சாரும் என்பதில் ஐயமில்லை. தமிழைப் பற்றியும் தமிழகத்தைப் பற்றியும் பாரதி யார் எழுதியுள்ள எல்ல.ாக் கவிதைகளையும் கட்டுரை களையும் இந்தத் தொகுப்பில் ஒருங்கு சேர்த்துத் தந்திருக் கிறேன். எனது அருமைத் தமிழ் மக்களே, இவற்றைப் படித்து, மீண்டும் படித்துப் பயனுடையுமாறு உங்களை அன்புடன் அழைக்கிறேன். இப் பகுதியோடு தொடர்புடைய ஏதாவது ஒரு பாரதி எழுத்து விட்டுப் போயிருந்தால் அதையும் அடுத்த் பதிப்பில் சேர்ப்பேன். வாழிய செந்தமிழ்: வாழ்க நற்றமிழர். வணக்கம். பெ. தூரன்