பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፱፱፻ உண்மையானல், பரோபகாரம் அருகே யிருக்கும். பரோப காரம் இல்லாத இடத்தில், தெய்வபக்தி வேஷத்தைத் தவிர வேருென்றுமில்லை. 45. அழுதபிள்ளை பால்குடிக்கும் பாரத தேசத்தாரில் லட்ச லட்சமான ஜனங்கள் இந்தப் போரில் மடிந்து ஆங்கிலேயருக்கு உதவிபுரிந்தோம். கோடானுகோடி திரவியத்தைக் கொடுத்து வருகிருேம். இன்னும் சேனையில் ஆள் சேர்த்துக் கொண்டிருக்கிருேம். எனவே, நாம் வாய் திறந்து கேட்டால், இங்கிலாந்து நமக்கு இப்போது சுயராஜ்யம் கொடுக்கும். நம்மை ஏமாற்ருது. இந்தச் சமயத்தில், நாம் இத்தனை உதவி செய்யும்போது, காங்கிரஸ் முஸ்லீம் சபையார் சொல்வதை நாம் சரி என்று நினைக்கவில்லை. சண்டை முடியுமுன்பாக இப்பொழுதே கைமேலே சுயராஜ்யம் வேண்டும் என்று நம்மவர் கேட்க வேண்டும் என்று நான் சொல்லுகிறேன். சண்டை முடிந்த பிறகு சுயராஜ்யம் போதுமென்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தால், அது கிடைப்பது அரிதாகும். இப்பொழுதே ஏன் கொடுக்கும்படி கேட்கக் கூடாது? அயர்லாந்து தேசத்தில் சண்டை முடியு முன்பாகவே ஸ்வராஜ்யம் கொடுப்பதற்குரிய முறைமைகளைப்பற்றி ஆலோசனை செய்வதற்காக ஒரு சபை நடந்து வருகிறது. அதில் ஸ்கல கட்சியாரும் சேர்ந்திருக்கிரு.ர்கள். அது போலவே, இந்த தேசத்திற்கும் ஒரு சபை ஏற்படுத்த வேண்டும்; அதில் இங்கிலீஷ் பிரதிநிதிகள் பாதித்தொகை, பாரதப் பிரதிநிதிகள் பாதித்தொகையாக இருந்து நடத்த வேண்டும். அவ்விதமான சபையை மந்திரி மாண்டேகு இந்த தேசத்தில் இருக்கும்போதே நியமிக்க வேண்டு