பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யுள்ளத்தில் எழுந்த ஓர் எண்ணம், காந்தியடிகளால் நடை முறை அனுபவத்துக்குக் கொண்டு வரப்பட்டது என்றே சொல்லலாம். எனவே தான் பிரெய்ல்ஸ்போர்டு என்ற விமர்சகர், “காந்தி செய்ததைப்போல் ஷெல்லி துன்பத்தின் சக்தியைப் போற்றிப் புகழ்கிறான் என்று *அராஜகத்தின் முகமூடி' கைப்பற்றி எழுதும்போது குறிப்பிடுகிறார் (Shelley, Goalviya and their Circle)-A. N. Brailsford). சொல்லப் போனால் வாழ்க்கைப்போரே இத்தகைய சாத்வீக முறையில்தான் நிகழவேண்டும் என்று ஷெல்லி கருதியதாகக் கூறலாம். இதனைப்பற்றி, அ வ ன து

  • கட்டறுந்த பிராமித்தியூஸ்" என்ற நாடகத்தின் கடைசி

வரிகளில் டெமோகார்கே!ன் (DemCgorgon) என்ற பாத் திரத்தின் வாய்மொழியாக வெளியிடும் பின்வரும் கூற்று விளக்கம் கூறுகிறது: * 'முடிவற்றது என நம்பிக்கையே நினைக்கும் துயரங்களை அனுபவிப்பது; மரணம் அல்லது இருள் ஆகியவற்றைக் காட்டிலும் இருண்ட குற்றங்களை மன்னிப்பது; சர்வ சக்தி படைத்ததெனத் தோற்றும் அதி காரத்தெ மறுத்தெதிர்ப்பது; அன்பு செலுத்துவது; சகிப்பது; நம்பிக்கையானது தான் சிந்தனை செய்யும் பொருளைத் தனது சொந்தச் சிதைவிலிருந்தே படைத்துத் தரும் வரையிலும், நம்புவது; மா றா:கலும் தடுமாறாமலும், வருந்தாமலும் இருப்பது ; டைட்டான்! உனது பெருமை யைப்போல், இதுதான் நல்லவரா வும், பெரியவராகவும், மகிழ்ச்சியும், அழகும், சுதந்திரமும் பெற்றவராகவும் இருப்பதாகும். இது ஒன்றுதான் வாழ்க்கை ! ஆனந்தம்; சாம்ராஜ்யம்; வெற்றி (வரிகள் 876-578): (To Suffer woes which Hope things infinite; To forgive wrongs darker than death (or right; To defy power, which seems omnipotent; To love, ard bear; to hope t}}| Hope creates From its own wreck the thing it countermplates Neither to change, nor falter, nor repent; This, like thy ஓory, Titan, is to be ! 64